சென்னை: 'அரசு ஊழியர்கள் அனைவருக்கும், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு கொண்டு வந்தால் அதை ஏற்கத் தயார்,'' என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் கனகசபாபதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. சங்க செயலர் செந்தில் முன்னிலை வகித்தார். சென்னை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செயலர் காசி நன்றி கூறினார். இதில், ஏராளமான டாக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேலூர் டாக்டர்களை உடனே பணி அமர்த்த வேண்டும். தவறு செய்பவர்கள் மீது நிர்வாகம் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த டாக்டர்களை துன்புறுத்திய வன்முறை கும்பலை கைது செய்ய வேண்டும். மருத்துவ பணி மாறுதல் கவுன்சிலை முறைப்படுத்த வேண்டும். பதவி, ஊதியம் உயர்வு தொடர்பான அரசாணை 354ஐ உடனே செயல்படுத்த வேண்டும். மருத்துவம் 24 மணி நேரப் பணி. இதற்கு 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு சரிவராது. எனவே, அதை செயல்படுத்தக் கூடாது. இருப்பினும் இதை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் செயல்படுத்தினால் நாங்களும் ஏற்கத் தயார் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
BIOMETRIC ATTENDANCE & STATE EC- DINAMALAR NEWS
Wednesday, April 21, 2010
Labels:
BIOMETRIC ATTENDANCE
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment